/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆர்.டி.ஓ., - போலீசார் சோதனை; ஆட்டோக்கள் பறிமுதல்
/
ஆர்.டி.ஓ., - போலீசார் சோதனை; ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : ஆக 02, 2024 11:33 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் விதிமீற இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ஆர்.டி.ஓ., - போலீஸ் குழு திடீர் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.
விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார் நேற்று காலை 8:00 மணிக்கு, விழுப்புரம் திருச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாம்பழப்பட்டு சாலையிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது, எப்.சி.,யை புதுப்பிக்காமல் விதி மீறி இயங்கிய 4 ஆட்டோக்கள், ஒரு மினி சரக்கு லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து தலா 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
மேலும், அளவுக்கு அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற 5 ஆட்டோக்களுக்கு தலா 1,000 ரூபாயும், உரிய ஆவணங்களின்றி இயங்கிய 3 ஆட்டோக்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தனர்.
இதே போல், நேற்று முன்தினம் விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தி, விதிமீறி அதிக பயணிகளை ஏற்றிய ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.