ADDED : செப் 17, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
கலெக்டர் பழனி தலைமையில் 'சமூக நீதி நாள்” உறுதிமொழியினை, அனைத்து துறை சார்ந்த பணியாளர்கள் ஏற்றனர்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய்நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சப் கலெக்டர் முகுந்தன், சப் கலெக்டர் (பயிற்சி) பிரேமி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில், உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.