ADDED : செப் 04, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மகனை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்தார்.
விழுப்புரம், வி.மருதுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராமச்சந்திரன்,24; இவர், பார்மசி படிப்பு பயின்று விட்டு வீட்டிலிருந்தார். கடந்த ஆக., 21ம் தேதி ராமச்சந்திரன் வீட்டில் சென்னைக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை.
அவரை, பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இவரின் தாய் லட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.