/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டி
/
மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டி
ADDED : செப் 07, 2024 05:30 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியத்தில் விவசாயிகளுக்கான மாநில அளவிலான பயிர் சாகுபடி போட்டி நடந்தது.
காணை ஒன்றியம் கடையம் கிராமத்தில் விவசாயி ராஜா வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கம்பு மகசூல் குறித்த போட்டிக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கினார். துணை இயக்குனர்கள் பிரேமலதா, நிர்மலா,உதவி இயக்குனர் ஆனந்தி,விவசாய பிரதிநிதி விஜயகுமாரி முன்னிலை வகித்தனர் .
விவசாயி ராஜா வயலில் அறுவடை செய்யப்பட்ட கம்பு சாகுபடியை கணக்கீடு செய்து மாநில தேர்வு குழுவிற்கு பரிந்துரை செய்தனர் .துணை வேளாண்மை அலுவலர் சுதர்சனம், உதவிவேளாண்மை அலுவலர் சுயம்பிரகாசம், ஆத்மா தொழில்நுட்ப வல்லுனர் சதீஷ் உட்பட முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்றனர்