/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரபு சார் நெல் ரக விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
/
மரபு சார் நெல் ரக விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : ஆக 13, 2024 10:12 PM

வானுார் : வானுார் தாலுகாவில் மருத்துவ குணம் கொண்ட 'சீவன் சம்பா' மரபு சார் நெல் ரக விதைகள் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தினை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்த மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகமான சீவன் சம்பாவை 7 ஏக்கர் பரப்பளவில் நெல் விதைப் பண்ணை அமைத்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வானுார் தாலுகாவிற்கு 280 கிலோ விதைகள் ஒதுக்கீடு பெறப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்விதைகளை உழவர் பயிற்சி மைய மாவட்ட வேளாண் துணை இயக்குநர் குமாரி ஆனந்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில், வானுார் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் ரேவதி, உதவி விதை அலுவலர் மோகன்குமார், உதவி வேளாண் அலுவலர் ரேகா, ஜெயலட்சுமி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் வாழ்வரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
விதை பண்ணை அமைக்க முன்வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு நெல் விதைகளை பெற்றுக் கொள்ளலாம். இதர பாரம்பரிய நெல் ரகமான ஆத்துார் கிச்சலி சம்பா மற்றும் செங்கல்பட்டு சிறுகமணி போன்ற ரகங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் கிலோ 25 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் நாற்று விட்டு, நடவு செய்யலாம் என வேளாண் உதவி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.