sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது

/

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது


ADDED : ஆக 29, 2024 06:56 AM

Google News

ADDED : ஆக 29, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம், கன்னிகா பரமேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ்; தச்சு தொழிலாளி. இவர் சமீபத்தில் கண்டாச்சிபுரத்தில் வாங்கிய இடத்தை அளவீடு செய்து, பட்டா மாற்றித் தரக்கோரி கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

தொடர்ந்து கடந்த 21ம் தேதி தாலுகா அலுவலகத்தில் இருந்த சர்வேயர் ராமமூர்த்தியை சென்று பார்த்தபோது, பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து சுரேஷ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று, தாலுகா அலுவலகத்தில் இருந்த சர்வேயர் ராமமூர்த்தி,45; மற்றும் அவரது உதவியாளர் சரத்குமார்,27; ஆகியோரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.4,400 பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கிய சர்வேயர் ராமமூர்த்தி, அவரது உதவியார் சரத்குமார் ஆகியோரை அங்கு மாறு வேடத்தில் இருந்த டி.எஸ்.பி., திருவேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி ஆகியோர் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us