sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாலிச்செயின், நகைகள் பறிப்பு; மனைவி புகார்: கணவர் கைது

/

தாலிச்செயின், நகைகள் பறிப்பு; மனைவி புகார்: கணவர் கைது

தாலிச்செயின், நகைகள் பறிப்பு; மனைவி புகார்: கணவர் கைது

தாலிச்செயின், நகைகள் பறிப்பு; மனைவி புகார்: கணவர் கைது


ADDED : மே 03, 2024 11:58 PM

Google News

ADDED : மே 03, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் குடும்பத்தகராறில், மனைவியிடம் தாலிச் செயின் மற்றும் நகைகளை பறித்துச் சென்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன், 41; இவரது மனைவி அகிலா, 32; இருவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அகிலா தனது 2 பிள்ளைகளுடன், விழுப்புரம் சிங்காரத்தோப்பில் உள்ள அவரது தாய் வீடான சிவகங்கை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி, சிங்காரத்தோப்பில் உள்ள வீட்டிற்கு வந்த சரவணன், பிள்ளைகளை பார்க்க வந்ததாக கூறி பேசியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், அகிலாவைத் தாக்கி, அவரிடமிருந்த 7 சவரன் தாலிச் செயின், 1.50 லட்சம் ரூபாய், 4 சவரன் நகைகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளார்.

இது குறித்து அகிலா அளித்த பேரில், சரவணன், அவரது உறவினரான ரமேஷ், 49; ஆகியோர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து நேற்று சரவணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us