ADDED : செப் 04, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே டேங்கர் லாரி மோதி, பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.
செஞ்சி அடுத்த பனப்பாக்கம், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 27; இவர், நேற்று முன்தினம் 10:30 மணியளவில் தீவனுாரிலிருந்து பைக்கில் செஞ்சி நோக்கி சென்றார்.
விழுக்கம் கிராமம் அருகே வந்த போது, செஞ்சியிலிருந்து திண்டிவனம் சென்ற டேங்கர் லாரி, பைக் மீது மோதியது. இதில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.