ADDED : ஜூன் 03, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் சாரம் லேபையில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகதிற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர், விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, சாரம் ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த், 23; என்பவரை கைது செய்தனர்.