sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தம்பியை வெட்டிய அண்ணன் கைது

/

தம்பியை வெட்டிய அண்ணன் கைது

தம்பியை வெட்டிய அண்ணன் கைது

தம்பியை வெட்டிய அண்ணன் கைது


ADDED : ஆக 13, 2024 06:29 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தம்பியை கத்தியால் வெட்டிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த வ.பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திகேயன், 47; அவரது தம்பி பால்ராஜ்,42; இருவருக்கும், திருமணமாகவில்லை. வாழையிலை வியாபாரம் செய்து வருகின்றனர்.

கார்த்திகேயன் நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பால்ராஜ், மழை அதிகமாக பெய்வதால், வீட்டுக்கு போகலாம் எனக்கூறி, தனது பைக்கில் அழைத்துச் சென்றார்.

அப்போது, விழுப்புரம் சிக்னல் அருகே பைக்கை நிறுத்தக்கூறிய கார்த்திகேயன் கீழே இறங்கி சென்றார். அப்போது, மீண்டும் பால்ராஜ் வீட்டிற்கு போகலாம் என கூறி அழைத்தார். ஆத்திரமடைந்த கார்த்திகேயன், வாழையிலை அறுக்கும் கத்தியால், பால்ராஜை சரமாரியாக வெட்டினார்.

படுகாயமடைந்த பால்ராஜ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திகேயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us