/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் திருட்டு திண்டிவனத்தில் பட்டபகலில் துணிகரம்
/
ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் திருட்டு திண்டிவனத்தில் பட்டபகலில் துணிகரம்
ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் திருட்டு திண்டிவனத்தில் பட்டபகலில் துணிகரம்
ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் திருட்டு திண்டிவனத்தில் பட்டபகலில் துணிகரம்
ADDED : ஆக 22, 2024 12:43 AM

மயிலம் : திண்டிவனத்தில் ஸ்கூட்டியில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திண்டிவனம் தியாகி சண்முகம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் தீனதயாளமூர்த்தி .இவரது மனைவி விமலா, 45; இவர் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள இந்தியன் வங்கியில் தனது மகளின் திருமணத்திற்காக ரூ. 3 லட்சம் கடன் பெற்று பணத்தை தனது ஸ்கூட்டியில் இருந்த சீட்டிற்கு அடியில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
வாகனத்தில் இருந்த பணத்தை எடுக்காமல் வீட்டிற்கு உள்ளே சென்றார். பின் நகை வாங்குவதற்காக ஸகூட்டியை எடுக்க வந்து பார்த்தபோது ஸ்கூட்டியின் சீட்டை உடைந்து இருப்பதும், அதில் இருந்த ரூ. 3 லட்சம் திருடுபோனது கண்டு விமலா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து விமலா திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி., காட்சியை ஆய்வு செய்தனர் அதில் விமலா வீட்டின் அருகே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் விமலா ஸ்கூட்டியின் சீட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து பணத்தை திருடிய மர்ம நபரை தேடிவருகின்னர். திண்டிவனத்தில் பட்ட பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

