/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு நிதி ஒதுக்கியும் ரேஷன் கடை கட்டாத அவலம் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு
/
அரசு நிதி ஒதுக்கியும் ரேஷன் கடை கட்டாத அவலம் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு
அரசு நிதி ஒதுக்கியும் ரேஷன் கடை கட்டாத அவலம் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு
அரசு நிதி ஒதுக்கியும் ரேஷன் கடை கட்டாத அவலம் கார்டுகளை ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு
ADDED : ஆக 24, 2024 07:03 AM

திண்டிவனம்: கீழ்அதனுாரில் பகுதி நேர ரேஷன் கடை கட்டித்தரவில்லையென்றால், ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கப்போவதாக, துணை தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டிவனம் அருகே உள்ள கீழ்ஆதனுார் கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை அமைப்பது குறித்து, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பகுதி நேர ரேஷன் கடை கட்டுவதற்கு ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்டடம் கட்டும் இடத்தில் தனியார் ஒருவர் கொட்டகை போட்டிருந்தார். இதை அகற்றுவதற்கு வருவாய்த்துறையிடம் புகார் கொடுத்தும் ஆளுங்கட்சி நெருக்கடி காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இதை தொடர்ந்து கீழ்ஆதனுார் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதே போல் நேற்று பிற்பகல் 3 மணியளவில், கீழ்ஆதனுார் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் பொதுமக்கள், திண்டிவனம் துணை தாசில்தார் உமா மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், ரேஷன் கடை கட்டும் இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பகுதி நேர ரேஷன் கடையை கட்டாத பட்சத்தில், கிராமத்தை சேர்ந்த 118 ரேஷன் கார்டுகளை ஒப்படைத்துவிடுவோம்'' என்று கூறியுள்ளனர். துணை தாசில்தார் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.