/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : ஆக 26, 2024 12:11 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், சாலாமேடு பிரபு நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 40; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வீட்டை பூட்டிக்கொண்டு அவரது மனைவி, மகன்களும், அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
மதியம் 1:00 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 5,000 ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.
ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.