/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூதாடிய வழக்கில் மூன்று பேர் கைது
/
சூதாடிய வழக்கில் மூன்று பேர் கைது
ADDED : மே 02, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை அருகே பணம் வைத்து சூதாடிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.
காணை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், நேற்று வைலாமூர் கிராமத்தில் உள்ள பம்பை வாய்க்கால் அருகே ரோந்து சென்றனர்.
அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ஞானவேல் மகன் மோகன்,33; காணையை சேர்ந்த லுார்துசாமி மகன் அருள்செல்வன்,32; பிச்சைமுத்து மகன் ஞானபிரகாசம்,42; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

