ADDED : ஏப் 22, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரைச் சேர்ந்த முனுசாமி மகன் விநாயகமூர்த்தி, 45; இவர், அதே ஊரில் மளிகைக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நாரணமங்கலம் கிராமத்திலிருந்து பருப்பு மூட்டைகளை வாங்கிக் கொண்டு தனது, மொபட்டில் கடைக்கு வந்து கொண்டிருந்தார்.
ரோடுபாளையம் சுடுகாடு அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், விநாயகமூர்த்தி படுகாயமடைந்தார். உடன், சேத்பட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என டாக்டர் தெரிவித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

