sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு விரைவு பஸ் திடீர் பழுதால் விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிப்பு

/

அரசு விரைவு பஸ் திடீர் பழுதால் விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிப்பு

அரசு விரைவு பஸ் திடீர் பழுதால் விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிப்பு

அரசு விரைவு பஸ் திடீர் பழுதால் விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிப்பு


ADDED : மார் 14, 2025 04:56 AM

Google News

ADDED : மார் 14, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் சர்வீஸ் சாலையில் அரசு விரைவு பஸ் திடீரென பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் சாலையருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக காலை 9.30 மணிக்கு புதிய பஸ் நிலையம் நோக்கி அரசு பஸ் வந்தபோது முன்புற வலது பக்க டயரில் திடீரென ஆக்ஸில் கட்டாகியது.

சுதாரித்த டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை அங்கேயே நிறுத்தியதால் அதில் பயணித்த பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்திருந்த

அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சர்வீஸ் சாலை வழியாக சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ரெக்கவரி வாகனம் வரவழைக்கப்பட்டு பழுதான பஸ்சை நகர்த்திய பின், காலை 10.15 மணிக்கு போக்குவரத்து சீராகியது. இதன் காரணமாக விழுப்புரம் பைபாஸ் சாலை அருகே சர்வீஸ் சாலையில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us