/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி திண்டிவனம் அருகே சோகம்
/
ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி திண்டிவனம் அருகே சோகம்
ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி திண்டிவனம் அருகே சோகம்
ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி திண்டிவனம் அருகே சோகம்
ADDED : ஆக 08, 2024 12:17 AM

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கூலித்தொழிலாளி. இவரது மகள்கள் பிரியதர்ஷினி, 11, சுபலட்சுமி, 8. அவர்களது உறவினர் விஜயகுமார் மகன் சஞ்சய், 10. இவர்கள் மூவரும் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முறையே 6, 3 மற்றும் 5ம் வகுப்பு படித்தனர்.
நேற்று மாலை 4:30 மணிக்கு மூவரும், நாவல் பழம் பறிப்பதற்காக, அதே பகுதியில் உள்ள ஓடையை கடக்க, ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். அப்போது, அவர்கள் அடுத்தடுத்து நீரில் முழ்கினர். இதை பார்த்த ஒருவர் கூச்சலிட்டார். கிராம மக்கள் ஓடி வந்து ஓடையில் இறங்கி தேடி, மூவரின் உடலை மீட்டனர். அவை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.