sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி திண்டிவனம் அருகே சோகம்

/

ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி திண்டிவனம் அருகே சோகம்

ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி திண்டிவனம் அருகே சோகம்

ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி திண்டிவனம் அருகே சோகம்


ADDED : ஆக 08, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : நாவல் பழம் பறிக்க ஓடையில் இறங்கிய மூன்று சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம், தாந்தோணியம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகள்கள் பிரியதர்ஷினி,11; சுபலட்சுமி, 8; இவர்களது உறவினர் அதே பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் சஞ்சய்,10; மூவரும் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முறையே 6, 3 மற்றும் 5ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மூவரும், நாவல் பழம் பறிப்பதற்காக அதே பகுதியில் உள்ள ஓடைக்கு சென்றனர். ஓடையை கடந்து சென்றுதான் நாவல் பழம் பறிக்க வேண்டும் என்பதால், ஒருவர் பின் ஒருவராக ஓடையில் இறங்கியுள்ளனர்.

ஆழம் அதிகமாக இருந்ததால், ஒருவர் நீரில் மூழ்கியதை பார்த்த மற்ற இருவரும் அவரை காப்பாற்ற முயன்று, அடுத்தடுத்து நீரில் முழ்கினர்.

அப்போது, அவ்வழியே சென்ற ஒருவர், ஓடை நீரில் ஒருவரின் கை மட்டும் வெளியே நீட்டியபடி இருந்ததால் கூச்சலிட்டார். கிராம மக்கள் ஓடி வந்து ஓடையில் இறங்கி தேடி, மூவரின் உடலை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டிவனம் தாசில்தார் சிவா மற்றும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

ஒரே கிராமத்தில் மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us