ADDED : மார் 21, 2024 11:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த மோட்சகுளம் ஏரிக்கரையில், நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர், அந்தப் பகுதியில் ஆதரவின்றி, யாசகம் செய்து வந்துள்ளார். எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
வி.ஏ.ஓ., பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார், முதியவரின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

