ADDED : ஏப் 05, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, சென்னை சாலையில் நேற்று காலை 11:00 மணிக்கு அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

