sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு நுாதன தண்டனை விழுப்புரம் நீதிக்குழுமம் உத்தரவு

/

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு நுாதன தண்டனை விழுப்புரம் நீதிக்குழுமம் உத்தரவு

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு நுாதன தண்டனை விழுப்புரம் நீதிக்குழுமம் உத்தரவு

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு நுாதன தண்டனை விழுப்புரம் நீதிக்குழுமம் உத்தரவு


ADDED : ஆக 22, 2024 02:06 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் பாலியல் வழக்கில் சிறுவன் ஒருவருக்கு, நுாதன தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த கெடார் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் அஜித்,24; இவர், கடந்த 2016ம் ஆண்டு, 14 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், சிறுமியை அவரது வீட்டில் விட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அஜித்தை கைது செய்த கெடார் போலீசார், அவர் மீது விழுப்புரம் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் கடத்தல் மற்றும் போக்சோ பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜித் ஓராண்டிற்கு அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சமூக சேவை செய்திட உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us