ADDED : மார் 15, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: பெரமண்டூரில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி, மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் துவக்க உரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் சேகர், சிவானந்தம், ஞானசேகர், ஜெயராமன், பிரகாஷ், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர்கள் மகேஸ்வரி, விஜயன், விவசாய அணி பாஸ்கர், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.