/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்
/
நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஆக 04, 2024 12:13 AM

திண்டிவனம்: திண்டிவனம் உழவர் சந்தையில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமார் வரவேற்றார்.
நிர்வாகிகள் சுந்தரம், டாக்டர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், உரம், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில், திண்டிவனம் முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், வேளாண் உதவி இயக்குனர் சரவணன், உழவர்சந்தை நிர்வாக அலுவலர் கருப்பையா, சங்கத்தின் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.