ADDED : மே 30, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே வேலியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தும்பநாயகம் மகன் முருகவேல்,31; கடன் பிரச்னை அதிகமாக இருந்ததால் இவர், கடந்த 12ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.