ADDED : செப் 04, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அடுத்த கொங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி நல்லம்மாள், 68; இவர், கடந்த 29ம் தேதி தனது கணவரோடு, குடும்ப தகராறு ஏற்பட்டதால் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.