ADDED : செப் 01, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் மனைவி அஞ்சலை, 65; கூலித் தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள கலியமூர்த்தி வீட்டில் 'டிவி' பார்க்கச் சென்றவர், இரவு 11:00 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது, வழியில் அறுந்து கிழே கிடந்த மின் கம்பியை மிதித்தார். அதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.