ADDED : மார் 03, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி ஜீப் மோதி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரைச் சேர்ந்தவர் நாகப்பன், 60; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு செஞ்சி சாலையை கடக்க முயன்றார். அப்போது, விழுப்புரம் நோக்கிச் சென்ற மகேந்திரா பொலிரோ ஜீப், நாகப்பன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து ஏற்படுத்திய ஜீப் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் துரத்திச் சென்று அசோகபுரியில் மடக்கிப் பிடித்தனர். புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.