ADDED : ஏப் 30, 2024 06:11 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரயில் மோதி தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த ஆயந்துார் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமிபதி மகன் அஜித்குமார், 24; கூலித் தொழிலாளி. இவருக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு, ஆயந்துார் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் அவர் நடந்து சென்றார்.
அப்போது, தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த, விழுப்புரம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் மற்றும் போலீசார், அஜித்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து, வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

