ADDED : மே 06, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திண்டிவனம் அடுத்த தென்பசார் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 52; இவர் கடந்த ஒரு வாரமாக வானுார் அடுத்த ராவுத்தன்குப்பத்தில் உள்ள தனது உறவினர் பச்சையப்பன் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் 4ம் தேதி காலை 7:00 மணிக்கு, புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது.
பலத்த காயமடைந்த ரங்கநாதன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு, சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார்.
ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.