நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 55; கூலித் தொழிலாளி.
வெளியூரில் வேலை செய்து வந்த இவர் கடந்த 4ம் தேதி செண்டூரில் நடந்த கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மனமுடைந்த நிலையில் இருந்த அவர், அன்றிரவு இரவு பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் மதியம் இறந்தார். மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.