ADDED : ஜூலை 20, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே உடல்நிலை குறைவால் மனமுடைந்த தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி அடுத்த அன்னியூரைச் சேர்ந்தவர் அய்யப்பன், 45; கூலித் தொழிலாளி. இவர், சமீப காலமாக சிறுநீரக கோளாறால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இரூந்தார்.
இதனால், மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
