ADDED : செப் 11, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: விழுப்புரம் அருகே இளம் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கொளத்துார் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காந்தி மகள் ரஞ்சனி, 28; டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.