/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
/
பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது
ADDED : ஜூன் 23, 2024 04:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:
வளவனுார் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கெங்கராம்பாளயைம் சோதனைச் சாவடி அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பொதுமக்களை ஆபாசமாக திட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார். விசாரணையில், வேலியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், 38; என தெரியவந்தது. உடன் போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.