ADDED : மார் 02, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சின்னகல்லிப்பட்டு தென்பெண்ணையாற்றில் ரோந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, ஏ.கே.குச்சிப்பாளையம் சுந்தரமூர்த்தி மகன் புருஷோத்தமன், 24; என்பவர் அனுமதியின்றி மினி லாரியில் மணல் ஏற்றியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து புருேஷாத்தமனை கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனர்.