நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், மார்ச் 12-
உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு பழைய காலனியைச் சேர்ந்தவர் ரகுராமன், 36; தொழிலாளி. திருமணமானவர். இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 10ம் தேதி இரவு 7:30 மணியளவில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.