sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

12 சவரன் நகை, பணம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்

/

12 சவரன் நகை, பணம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்

12 சவரன் நகை, பணம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்

12 சவரன் நகை, பணம் கொள்ளை வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்


ADDED : அக் 14, 2024 08:21 AM

Google News

ADDED : அக் 14, 2024 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே தனியார் பார் கேஷியரின் வீட்டின் பூட்டை உடைத்து 12 சரவன் நகை, 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வானுார் அடுத்த ஆகாசம்பட்டு பெருமாள் நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 35; புதுச்சேரியில், தனியார் பாரில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஆயுதபூஜை அன்று இரவு, வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றார்.

நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கேட் மற்றும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அறைக்குள் இருந்த பீரோவை உடைத்து, 12 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வானுார் இன்ஸ்பெக்டர் சிவராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரத்திலிருந்த மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. கைரேகை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கல்பனா தடயங்களை சேகரித்தார்.

வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us