sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

2 வீடுகளில் 13 சவரன் நகை கொள்ளை

/

2 வீடுகளில் 13 சவரன் நகை கொள்ளை

2 வீடுகளில் 13 சவரன் நகை கொள்ளை

2 வீடுகளில் 13 சவரன் நகை கொள்ளை


ADDED : அக் 11, 2024 06:45 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: காணை அருகே 2 வீடுகளில் 13 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காணை அடுத்த மல்லிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மனைவி கலையரசி, 40; இவர் தனது தாய் சின்னபொன்ணு, 75; மகள்கள் குணவதி, குணஸ்ரீ ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் கலையரசி, தனது மகள்களோடு விவசாய பணிக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து சின்னபொண்ணு, வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இதே போல், அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், 30; என்வரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த காணை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீடுகளில் தடயங்களை சேகரித்தனர்.

மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us