/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
14ல் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
/
14ல் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : டிச 12, 2024 06:49 AM
விழுப்புரம்: பொது விநியோக திட்டம் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 14ம் தேதி ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் தனி தாசில்தார் (குடிமை பொருள்), வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
இதில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு,நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் வேண்டி முகாமில் கோரிக்கையையும், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனியாக கோரிக்கை மனு வழங்கலாம்.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகார சான்று கோரும் கோரிக்கை மனுவையும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்து புகார்களையும் ரேஷன் கார்டுதாரர்கள் தனி தாசில்தார் (குடிமை பொருள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் கொடுக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.