/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
/
மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
ADDED : மே 10, 2025 12:40 AM

வானுார்: புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் அருவாப்பாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 96 புதுச்சேரி குவாட்டர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், மரக்காணம் அடுத்த கந்தாடு ஆதிகேசவன் மகன் தமிழரசன், 28; ேஷக் அலி மகன் ெஷரீப் ஜான், 26; என்பது தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.