sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

3 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விழுப்புரத்தில் 2 சிறுவர்கள் கைது

/

3 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விழுப்புரத்தில் 2 சிறுவர்கள் கைது

3 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விழுப்புரத்தில் 2 சிறுவர்கள் கைது

3 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு விழுப்புரத்தில் 2 சிறுவர்கள் கைது


ADDED : ஏப் 01, 2025 07:49 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே 3 அரசு விரைவு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று சென்றது. திருவாரூர் மாவட்டம், முகுந்தனுார் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் மார்டின், 52; கண்டக்டராக பணியில் இருந்தார்.

மதியம் 1:30 மணிக்கு விழுப்புரம் சுந்தரிபாளையம் அருகே வந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த 12 முதல் 16 வயதுடைய சிறுவர்கள் 4 பேர் பஸ்சை மறித்து பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

கண்டக்டர் ஜேம்ஸ் மார்டின் தட்டி கேட்டபோது, 4 சிறுவர்களும் சேர்ந்து தாக்கி மிரட்டல் விடுத்தனர். அப்போது, பின்னால் வந்த மேலும் 2 அரசு விரைவு பஸ்களின் கண்ணாடிகளையும் சிறுவர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு, தப்பியோடினர்.

கண்டக்டர் ஜேம்ஸ் மார்டின் அளித்த புகாரின்பேரில், நான்கு சிறுவர்கள் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us