/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
ADDED : நவ 28, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று கே.கே., ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பைக் ஓட்டிச் சென்ற கே.கே., ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராஜேஷ், 22; என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், விக்கிரவாண்டி போலீசார், பனையபுரம் கூட்ரோடில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக பைக் ஓட்டி வந்த உளுந்துார்பேட்டை ஹபீப் மகன் முஜீபுர் ரஹ்மான், 37; மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

