ADDED : பிப் 21, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் டி.புதுப்பாளையம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல், 65; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆனத்துார் காலனி பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 38; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.