நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பணம் வைத்து சூாதடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர், பாரதி நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பணம் வைத்து சூதாடிய பிடாகம், குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், 40; அரசூர் கணேசன், 56; ஆகிய இரு வரையும் கைது செய்தனர்.