/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
/
பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
ADDED : மே 09, 2025 12:57 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்குகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் போலீசார் நேற்று மாலை 6:00 மணிக்கு பானாம்பட்டு ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர்கள், விழுப்புரம், மோட்சகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணா, 20; குமார் மகன் உதயபாரதி, 19; என்பதும், விழுப்புரம் நகரில் தொடர்ந்து பைக்குகளை திருடி வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர்கள் ஓட்டி வந்த பைக்கும் திருடி வந்ததை ஒப்புக் கொண்டனர். உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.