/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை மாத்திரையுடன் 2 வாலிபர்கள் கைது
/
போதை மாத்திரையுடன் 2 வாலிபர்கள் கைது
ADDED : டிச 10, 2024 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்; மயிலத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மலை அடிவார பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள், 1,250 கிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்து தெரியவந்தது.
விசாரணையில், மயிலம் காமராஜர் நகர் கணேசன் மகன் செல்வம், 24; காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கட்டளை தயாளமூர்த்தி மகன் மோகன்ராஜ், 24; என தெரியவந்தது. கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.