sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

/

பள்ளி சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

பள்ளி சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

பள்ளி சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


ADDED : ஜன 07, 2024 04:53 AM

Google News

ADDED : ஜன 07, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 56; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை யாரிடமாவது கூறினால் உன் தந்தையை கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பன்னீர்செல்வத்தை கைது செய்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார், அவர் மீது விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்துக்கு 20 ஆண்டு சிறை மற்றும் ரூ. 20 ஆயிரம் ் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் அரசு வழங்க உத்தரவிட்டார்.

தீர்ப்பை தொடர்ந்து, பன்னீர்செல்வம் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us