ADDED : ஆக 27, 2025 11:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் விபசார வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள லாட்ஜ் ஒன்றில் சோதனை செய்தனர்.
அங்கு, கோழிபட்டு கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 45; சித்தானங்கூர் நவநீதகிருஷ்ணன், 37; ராகவன் பேட்டை சுந்தர், 49; ஆகியோர், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட இரு பெண்களை மீட்டு, விழுப்புரம் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.