/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்
/
ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஏப் 26, 2025 09:48 AM
விழுப்புரம் : விழுப்புரம் வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில், நேற்று மாலை 5:30 மணிக்கு, 4வது பிளாட்பாரத்திற்கு வந்த திருப்பதி - ராமேஸ்வரம் ரயிலில், ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பின் பக்க பொது பெட்டியின் கழிவறை அருகே கேட்பாராற்று கிடந்த ஒரு டிராவல் பேக்கை திறந்த பார்த்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
போலீசார் சோதனையின் போது, கஞ்சா கடத்தி வந்த நபர் அப்படியே போட்டு விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதனையடுத்து, கஞ்சாவுடன் கூடிய பையை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.