/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கொலைக்கு விபத்து 'செட்டப்' 3 வாலிபர்கள் சிக்கினர் விழுப்புரம் வாலிபர் உட்பட 3 பேர் கைது
/
கொலைக்கு விபத்து 'செட்டப்' 3 வாலிபர்கள் சிக்கினர் விழுப்புரம் வாலிபர் உட்பட 3 பேர் கைது
கொலைக்கு விபத்து 'செட்டப்' 3 வாலிபர்கள் சிக்கினர் விழுப்புரம் வாலிபர் உட்பட 3 பேர் கைது
கொலைக்கு விபத்து 'செட்டப்' 3 வாலிபர்கள் சிக்கினர் விழுப்புரம் வாலிபர் உட்பட 3 பேர் கைது
ADDED : டிச 01, 2024 02:00 AM

விழுப்புரம்,:விழுப்புரம் அடுத்த விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையோரம் கடந்த, 28ம் தேதி, அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், இறந்த நபர், தேனி மாவட்டம், உத்தமபாளையம் ரங்கசாமி மகன் அரவிந்த், 24, என, தெரிய வந்தது. உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில், அரவிந்த் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சென்னையில் வசித்து வந்த விழுப்புரம், வெங்கத்துார் கிராமத்தைச் சேர்ந்த செல்வகஜபதி என்பவரும், அரவிந்தும் நண்பர்கள். செல்வகஜபதி மனைவியுடன் அரவிந்த் நெருங்கி பழகியுள்ளார்.
ஆத்திரமடைந்த செல்வகஜபதி, செங்கல்பட்டு, சட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் மற்றும் கணேசன் ஆகியோருடன் சேர்ந்து, கடந்த, 28ம் தேதி சென்னை மறைமலை நகர் அருகே அரவிந்த்தை தாக்கி, கொலை செய்துள்ளனர்.
அவர் விபத்தில் இறந்ததைப் போல், போலீசாரை நம்ப வைப்பதற்காக, உடலை, விழுப்புரம் விராட்டிகுப்பம் புறவழிச்சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய செல்வகஜபதி, 29, அரவிந்தன், 27, கணேசன், 27, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

