/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
37வது மாநில அளவிலான சதுரங்க போட்டி பரிசளிப்பு
/
37வது மாநில அளவிலான சதுரங்க போட்டி பரிசளிப்பு
ADDED : மே 07, 2025 11:55 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மாநில சதுரங்க போட்டி ஓபன் பிரிவில் கடலூர் மாவட்டம் மைதிக் முதல் பரிசும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த யானிஷ் இரண்டாம் பரிசும் பெற்றனர்.
விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், 7 வயதிற்கு உட்பட்டோருக்கான 37வது மாநில அளவிலான சதுரங்க போட்டி, விழுப்புரம் பாலாஜி அரங்கம் மற்றும் ஜெயசக்தி திருமண மண்டபத்தில் நடந்தது.
கடந்த 1ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் சதுரங்க போட்டி நடந்தது. விழுப்புரம் அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் சுப்புராமன் சதுரங்க போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 35 மாவட்டங்களில் இருந்து 280 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 9 சுற்றுகள் கொண்ட போட்டியின் இறுதி சுற்று கடந்த 4 தேதி நடந்தது. சர்வதேச சதுரங்க நடுவர் விசாலாட்சி தலைமையில் போட்டி நடந்தது.
அதைத் தொடர்ந்து, போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, ரூ 50 ஆயிரம் பரிசு தொகை, சான்றிதழ்கள், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஓமணாகிருஷ்ணன், செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் கண்ணன், துணை தலைவர்கள் வேணுகோபால், சம்பத், தசரதன், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், இணை செயலாளர் ஈஸ்வர்ராஜ், செயற்குழு உறுப்பினர் நாராயணன் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
சதுரங்க போட்டி ஓபன் பிரிவில், கடலூர் மாவட்டம் மைதிக் முதல் பரிசும், சென்னை மாவட்டம் யானிஷ் இரண்டாம் பரிசும் பெற்றனர்.
சிறுமியர் பிரிவில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த யாழிசை முதல் பரிசும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜித்திஷாஸ்ரீ இரண்டாம் பரிசும் பெற்றனர். இதில் முதல் இரண்டு பரிசு பெற்ற மாணவர்கள், தேசிய அளவில் நடக்கும் சதுரங்க விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர்.